நானும் மூணு சக்கர சைக்கிள் ஓட்டப் போறேன் - மூணு மூணு பதில்கள் சொல்லி... (தொடர் பதிவு)

வியாழன், ஜூலை 28, 2011



இது நான் எழுதும் முதல் தொடர்பதிவு. என்னையும் இந்தத் தொடர்
ஓட்டத்தில் கலந்து கொள்ள அழைத்த கோவை2தில்லி 
அவர்களுக்கு நன்றி.

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
* அதிகாலை அமைதியில் படிப்பது.
* பௌர்ணமி நிலவில் மொட்டை மாடியில் பால் சாதம் சாப்பிட.
* இரவுநேரம் ஜன்னலோர இருக்கைப் பயணம்.
 
2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?  
* நம்மைப் பேசவிடாமல் பேசிக்கொண்டே இருப்பவர்கள்.
* அதிக சத்தத்துடன் பாட்டுக் கேட்பது, டிவி பார்ப்பது.
* முதுகுக்குப் பின் நம்மைப் பற்றி பேசுபவர்கள்.

3) பயப்படும் மூன்று விஷயங்கள்?
* ராட்டினம், ரோலர்கோஸ்டர் இவற்றில் போக.
* பஸ் பயணங்களில் சில்மிஷம் செய்யும் ஆசாமிகள்.
* கூட்டம்.  

4) உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்?
* சில விளம்பரங்கள் மற்றும் சில கவிதைகள்.
* அறிமுகம் இல்லாத நபரிடம் தன்னைப் பற்றி எல்லா
விஷயங்களையும் சொல்வது. (சொந்த விஷயங்கள் உட்பட)
* எல்லா நாட்களிலும் பேருந்து, ரயில், விமானம் என
எல்லாவற்றிலும் இருக்கும் பயணிகளின் கூட்டம்.
(எங்கதான் போவாங்களோ?)
 
5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
* லேப்டாப்.
* பென் ஸ்டாண்ட்.
* நிறைய புத்தகங்கள்.

6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்?
* எனது குழந்தையின் சேட்டைகள்.
* வடிவேலுவின் சில காமெடிக் காட்சிகள்.
* என் கணவர் பாடுவது.

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
* என் குழந்தையுடன் விளையாடுவது.
* திரு. கி.ராஜநாராயணன் அவர்களின் "கோபல்ல கிராமம்"
புத்தகம் படித்துக் கொண்டிருப்பது. 
* அக்கவுண்ட்ஸ் பற்றிய அடிப்படை விஷயங்களைத்
தெரிந்து கொள்வது.

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
* சொந்தமாக ஒரு வீடு.
* அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுப்பது.
* சச்சின் டெண்டுல்கரைச் சந்திப்பது.

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
* பள்ளி நாட்களில் விட்ட, ஓவியம் வரைதல், கட்டுரை
எழுதுதல் இவற்றைத் தொடர வேண்டும். 
* படிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க
வேண்டும். ( மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று என) 
* பத்திரிக்கைகளுக்கு எழுதுவது.

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
* பொய் பேசுவதை.
* மனம் புண்படும்படியாக பேசுவதை.
* கேட்ட வார்த்தைகளால் திட்டுவதை.

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
* நிறைய மொழிகள். (தற்போதைக்கு சரளமாக ஹிந்தி பேச)
* நீச்சல்.
* வீணை.

12) பிடித்த மூன்று உணவு வகைகள் ?
பிடிக்காதென்று எதுவும் இல்லை. இருந்தாலும் மூன்று...
* கேக் வகைகள்.
* கோபி மஞ்சூரியன்.
* அசைவ உணவுகள்.

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
* எந்தப் பூவிலும் வாசம் உண்டு... (முரட்டுக் காளை)
* பூங்காற்று உன் பேர்சொல்ல... (வெற்றி விழா)
* உயிரே உயிரே என் உயிரே... (தொட்டி ஜெயா)
 
14) பிடித்த மூன்று படங்கள்?
* மௌனராகம்.
* பம்பாய்.
* ரிதம்.

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?
* அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம்,
காற்று, நீர், தூக்கம்.
* வெளி உலக தொடர்பு.
* புத்தகங்கள்.

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்? 

அப்பா! ஒரு வழியா முடிச்சாச்சு. தொடர்ல பாஸாகிட்டேனான்னு
தெரியலை.

சர்க்கஸ்

ஞாயிறு, ஜூலை 24, 2011

இந்தியன் சர்க்கஸ்









             சமீபத்தில் சர்க்கஸ் ஒன்றிற்கு சென்றிருந்தேன். மால்களும் சினிமாக்களும் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் சர்க்கஸ்
கலைஞர்களுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விட்டன. பார்வையாளர்கள் கூட்டமும் குறைவாகவே இருந்தது.
மொத்தமாக சர்க்கஸ் கலைஞர்கள் சுமார் நூறு பேராவது இருப்பர்.
அதில் பெண் கலைஞர்கள் மட்டுமே சுமார் இருபத்தைந்து பேர்
இருந்தனர்.  மேலும் யானைகள், ஒட்டகங்கள், நாய்கள்  போன்ற விலங்குகளும் இருந்தன.
             இவர்கள் அனைவருக்கும் சாப்பாடு,உடை மற்றும்
தங்குவதற்கான செலவுகளுக்கு கண்டிப்பாக வரும் வருமானம்
பற்றாது. கிழிந்த உடைகளுடன் அவர்களைப் பார்க்கும்போதே
கஷ்டமாக இருந்தது. அவர்கள் செய்யும் கஷ்டமான
சாகசங்களுக்கெல்லாம் சாப்பிடும் சாப்பாடு போதுமானதாக
இருக்காது. கூண்டுக்குள் மோட்டார் சைக்கிள் ஓட்டும் இருவரும்,
ஊஞ்சலில் தொங்கி சாகசங்களைக் காண்பிக்கும் ஆண்களும்
பெண்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நம்மை
மகிழ்விக்கின்றனர்.
             முன்பெல்லாம் யானை,சிங்கம், நாய்களைப் பயன்படுத்தி
பல சாகசங்கள் செய்து காண்பிப்பர். ஆனால் இப்பொழுது
மிருகவதைத் தடுப்புச் சட்டத்திலிருந்து விலங்குகளை
சாகசங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என ஆணையிட்டிருப்பதால், விலங்குகளைப்  பயன்படுத்துவதும் குறைந்துவிட்டது.
இதனால்தானோ என்னவோ , பார்வையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.
           நமது நாட்டில் இந்தியன் சர்க்கஸ், ஜெமினி சர்க்கஸ்
போன்ற சில சர்க்கஸ்களே தற்போது உள்ளன.  இவையும்
அழிந்துவிடாமல் நாம்  பாதுகாக்கவேண்டும்.
சர்க்கஸ்களுக்கும் சர்க்கஸ் கலைஞர்களுக்கும் வாழ்வளிக்க
வேண்டும்.

        


டெல்லி கிளைமேட்

செவ்வாய், ஜூலை 12, 2011





                 டெல்லி வெயில்ல இருந்து தப்பிக்கிறதுக்காக ஒரு
மாசம் ஊருக்குப் போயாச்சு. அங்க போனா இதை விடக்
கொடூரமா இருந்தது வெயில். கடைசியா ஊருக்கு
கிளம்பும்போதுதான் குற்றால சீசனால கொஞ்சம் கிளைமேட்
நல்லா இருந்தது.

                நாகர்கோவில் போயிருந்தபோதும் , அங்க இப்போ
ஆணிஆடிச் சாரல். குளுகுளு காற்றோட சாரல் சூப்பரா இருந்தது.
வரவே மனசு இல்லை. ஒரு மாசம் போனதே தெரியலை.
டெல்லி வந்தாச்சு. இங்க இப்போ வெயில் குறைஞ்சிடுச்சு. ஆனா,
புழுக்கம் தாங்க முடியலை. மழையும் பெய்யாம, வெயிலும்
இல்லாம கிளைமேட் கொல்லுது. வீட்டுக்குள்ள இருக்க
முடியலை. வியர்வைக் குளியலா இருக்கு தினமும். இதனால்
சீக்கிரமே டயர்டாகி எரிச்சல்தான் வருது. இங்க அடிக்கிற
அதிகமான வெயிலையும், குளிரையும் கூட சமாளிச்சிடலாம்
போல இதுக்கு. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி
இருக்குமோ தெரியலை? படுத்தி எடுக்குது மனுஷனை.
             ஊருக்கு போயிட்டு வந்தாச்சு. போயிட்டு வந்த
இடங்களைப் பத்தி எழுதவேண்டாமா? அடுத்த பதிவுகளில்
எழுதறேன்.
Related Posts with Thumbnails